தலைமறைவான இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, 36, கோவை மாவட்டத்தில் போலி ஆதார் அட்டை பெற்று பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் தமிழகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூலை 3ல், உயிரிழந்த நிலையில், மதுரையில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின், அங்கொட லொக்கா பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கியை, அவரது இறப்புக்கு பின், கூட்டாளி சனுக்கா தனநாயக்காவிடம் கொடுத்துள்ளனர். அவர் ஜூலை, 20 வரை மதுரையில் தங்கியுள்ள்ளார். இந்நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி., – டி.எஸ்.பி., ராஜு அவர்கள் தலைமையில், சனுக்கா தனநாயக்காவை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘சனுக்கா தனநாயக்கா, இந்தியாவை விட்டு செல்லவில்லை. அவர் மதுரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பதுங்கியிக்கலாம் என்பதால், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அவர் பிடிபட்ட பின்னரே அங்கொட லொக்கா குறித்த மர்மங்கள் விலகும்’ என்றனர்.
Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…
Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு…
Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19)…
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…