நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்…!

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்…!

நாகை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அடிக்கடி இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த தாக்குதல்   தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், நாகை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடற்கொள்ளையர்கள் அபகரித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள் நாகை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube