இலங்கை நாடாளுமன்ற தேர்தல்! பிற்பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவு!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்று இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 16-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் இன்று நடைபெறுகிறது.

கொரோனா  மத்தியில் இந்த தேர்தல் நடைபெறுவதால், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்நிலையில்,பிற்பகல் 1 மணிவரை 45% வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.