இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அரசு!

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சீரம் நிறுவனத்தின் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கை அரசு பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் நன்கொடையாகவும் விநியோகிக்கப்பட்டும் வருகிறது. இந்த தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு குறிப்பிட்ட அளவு இந்தியாவால் அனுப்பப்பட்டு இருந்தது. இது முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலங்கையில் முதல் கட்டமாக போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான தடுப்பூசிகள் கூடுதலாகத் தேவை என இலங்கை அரசு அண்மையில் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதனடிப்படையில் தற்போது இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து சீரம் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை இலங்கை அரசு நேற்று பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்தது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Rebekal

Recent Posts

இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…

2 mins ago

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…

8 mins ago

‘அவர் ஆட்டம் நம்பவே முடியல ..’ ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்,…

17 mins ago

வாக்களிக்க செல்ல இயலாதோர் கவனத்திற்கு… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…

46 mins ago

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா இன்று – இபிஎஸ்

Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும்…

50 mins ago

வாக்களித்த திரை பிரபலங்கள்…முதல் ஆளாக வந்த அஜித் குமார்!

Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…

1 hour ago