டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இலங்கை சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ஹார்திக் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், சாஹல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்:

அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கேப்டன்), ஆஷென் பண்டாரா, வாணிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, இசுரு உதனா, அகில தனஞ்சய, துஷ்மந்தா சமீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan