தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்று ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னையில் இதற்கான ஏலம் நடைபெறுகிறது.ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1,114 கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்திருந்தனர், இருப்பினும், 8 ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் பட்டியலிடப்பட்ட வீரர்களை சமர்ப்பித்த பின்னர் 292 வீரர்களை கொண்ட பட்டியல் வந்தது. பிசிசிஐ வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள், மற்றும் அசோசியேட் நேஷனின் 3 வீரர்கள் ஏலத்தில் விடப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வருகின்ற 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள 2021 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்திற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் பதிவு செய்தார்.ஆரம்ப விலை ரூ.75 லட்சம் என்று பதிவு செய்திருந்தார்.அவரது பதிவு யாரையும் ஈர்க்கவில்லை.கேரளாவை சேர்ந்த ஸ்ரீ சாந்த் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்பு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்கப்பட்டது.தற்போது அந்த தடை நீங்கியுள்ளது.
இதற்கிடையில்,ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களின் இறுதி பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றாலும் ஸ்ரீ சாந்த் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரீசாந்த் பதிவிட்டுள்ள வீடியோவில் , தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.கற்பனையின் எந்தவொரு நீட்டிப்பினாலும் தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும், மீண்டும் வருவதற்கு கடினமான முயற்சியை மேற்கொள்வேன் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…