#T20 World Cup 2022: 73 ரன்களுக்கு சுருண்டது யு.ஏ.இ, இலங்கை அணி அபார வெற்றி.!

Default Image

டி-20 உலகக்கோப்பை போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் ஆறாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற யு.ஏ.இ அணி முதலில் பந்து வீசியது.

இதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பத்தும் நிசங்கா 74 ரன்கள் குவித்தார். யு.ஏ.இ அணியில் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

153 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய யு.ஏ.இ அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்தது. இறுதியில் யு.ஏ.இ அணி 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியில் ஹஸரங்கா மற்றும் சமீரா தலா 3 விக்கெட்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்