நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற செயல்களால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வெளிய சென்றுவர மிகவும் அச்சப்பட்டு வருகின்றன நிலையில், தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்களை குறைக்கும் விதமாக தமிழக காவல்துறையால் காவலன் என்ற செயலி உருவாக்கப்பட்டு, அதனை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. அதில் எதாவது உதவி தேவைப்பட்டால் SOS என்ற பட்டனை அழுத்தினால் போதும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அனுப்பப்படும். பின்னர் விரைவாக சம்பவ இடத்துக்கே வந்து உதவி புரிவார்கள்.
இந்நிலையில், மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு என்ற இளைஞர் மீனாட்சி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் காவலன் செயலியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அவரது மெஸ்ஸில் சிறப்பு சலுகை என போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது. மேலும், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி என உணவகத்துக்கு வரும் பெண்களுக்கு வழங்கி வருகிறார். இவர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பெண்கள் மத்தியிலும், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…