சொந்த ஊரிலிருந்து திரும்பும் பொது மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் .!

தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பும் பொது மக்களுக்கு அடுத்த 4 தினங்களுக்கு 16,026 பேருந்துகள் இயக்கபட உள்ளது .

தீபாவளியை கொண்டாட மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் . அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 9,510 பஸ்கள் சென்னையிலிருந்து,
, 5,247 பஸ்கள் பிற ஊர்களிலிருந்தும் 11,12 மற்றும் 13-ஆம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பும் பொது மக்களுக்கு
8,026 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தமாக 16,026 பேருந்துகள் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முதல் வரும் 18-ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கும் 2,000 பேருந்துகளுடன் 1,395 சிறப்பு பேருந்துகள் சென்னைக்கும், 1,915 சிறப்பு பேருந்துகள் பிற ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளது .

author avatar
murugan

Leave a Comment