தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேரூந்துகளுடன் 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோவை, திருப்பூர், சேலம், பெங்களுருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும், ஏப்ரல் 6, 7ல் தினமும் இயக்கப்படும் 2,225 பேரூந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் சேலம், மதுரை, திருச்சி, தேனியில் இருந்து திருப்பூர், கோவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சேலம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்து பெங்களூரு என மொத்தம் 1,738 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,215 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்