இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்!

இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டு தோறும் ஜூன் 1 ஆம் தேதியில் தான் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும், இந்நிலையில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு மாதங்களில் மழை பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் துவங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது போல வட இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வழக்கமான அளவு தென்மேற்கு பருவமழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal