Breaking News:காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.எனவே 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று  மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றஎம்.பி.க்களுடன் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.அதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உடல்நிலை காரணமாக சோனியா தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியாவின் பெயரை மன்மோகன் சிங் முன்மொழிந்தார்.அதன்படி நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment