பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட தமிழிசை மகன் !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.அதேபோல் அதிமுகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.மேலும் பாஜக தோல்விக்கு காரணம்  தமிழகத்தில் இருந்த எதிர்ப்பு அலை தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இதற்கு ஏற்ற வகையில் தற்போது தமிழிசையின் வீட்டிலே ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அது வேறுயாரும் இல்லை அவரது மகன் சுகநாதன் தான்.
இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று அவரது மகன் தமிழிசைக்கு எதிராகவும் பாஜகவிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்.பின்னர் அங்கிருந்த தமிழிசையின் பாதுகாவலர்கள்  அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.பின்னர் இது தொடர்பாக தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்,எனக்கும் என்னுடைய மகனுக்கும் குடும்ப பிரச்சினை உள்ளது.அதனால் அவர் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டதாக தெரிவித்தார்.