வேலைக்கு செல்லவில்லை எனும் காரணத்தால் தன் வீட்டில் தங்கியிருந்த 70 வயது தாயை தன் மனைவியுடன் சேர்ந்து கொல்ல முயன்ற நபரை எட்டயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மெட்டில்பட்டி மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவிதான் மகாலட்சுமி. இவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து தனது மகன் முருகேசன் என்பவரின் வீட்டில் மகாலட்சுமி இருந்து வந்துள்ளார். மேலும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மகாலட்சுமி சென்று வந்துள்ளார். ஆனால் அண்மையில் மகாலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் தாயின் வருமானம் கிடைக்கவில்லை என ஆத்திரமடைந்த மகனும் மருமகளும் தினமும் வேலைக்கு செல்லுமாறு சித்திரவதை செய்து வந்துள்ளனர். ஆனால், அவர் உடல்நலக்குறைவு காரணமாக செல்ல முடியாமல் இருக்கவே மீண்டும் இதுகுறித்து தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தகராறு முற்றவே மிகவும் வயதாகி உடல் மெலிந்த நிலையில் காணப்படக்கூடிய 70 வயது தாயை தாய் என்றும் பாராமல் தனது மனைவியுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயற்சித்துள்ளார் முருகேசன்.
ஆனால், ஏற்கனவே சண்டை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே வரவே பாதி எரிந்த நிலையில் இருந்த வயதான மகாலட்சுமியை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் முருகேசன் மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகேசன் மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமியை கைது செய்துள்ளனர். பெற்ற தாய் என்றும் பாராமல் பணத்திற்காக மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய மகனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…