ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளது…! தமிழ்நாடு வணிகர் சங்கம் கண்டனம்…!

முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில கடைகளில் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து தமிழக அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, காய்கறி விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர். காய்கறிகளின் விலையை அதிகரித்து, மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அதிக விலைக்கு விற்பவர்களை வணிகம் செய்யும் நிலையிலிருந்து நீக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.