தற்போது வரை கூட்டணியில் எந்த பிளவும் இல்லை! பாமக நிறுவனர் ராமதாசுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

தற்போது வரை கூட்டணியில் எந்த பிளவும் இல்லை.

அதிமுக கட்சியுடன், கூட்டணி கட்சியாக உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை, செய்யவும் மறுக்கிறார்கள்!’ என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில், கூட்டணி கட்சிகள் தங்கள் முன்னிறுத்திக் கொள்ள இப்படி செய்வார்கள். அதை பொருட்படுத்தவேண்டாம். தற்போது வரை கூட்டணியில், எந்த பிளவும் இல்லை.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.