தமிழகத்தில் இதுவரை 2,83,937 பேர வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இதுவரை 2,83,937 பேர வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இதுவரை 2.83 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதி. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,532 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 37,78,778 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 5,667 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,83,937 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் மேலும் 120 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube