ஐபிஎல் 2019: ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!!

  • பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஒரு ஆண்டு காலம் தடை செய்யப்பட்டனர்.
  • இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதியுடன் இவர்களின் தடைகாலம் முடிவடைவதால், இம்முறை இவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆட மறுப்பு அளிக்கவில்லை.

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஐபிஎல் 2019ஆம் ஆண்டின் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல் அணியில் இணைந்தார். ஸ்மித் இந்திய பிரீமியர் லீகின் முந்தைய பருவத்தை தடை விதித்ததன் காரணமாக தவறவிட்டார்.

பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஒரு ஆண்டு காலம் தடை செய்யப்பட்டனர். அதன் காரணமாக இருவரும் ஐபிஎல் போட்டிகளிலும் ஆட முடியாது என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதியுடன் இவர்களின் தடைகாலம் முடிவடைவதால், இம்முறை இவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆட மறுப்பு அளிக்கவில்லை. அதனால்  தற்பொழுது  இணைந்துள்ள வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் முதல் சில போட்டிகளில் ஆடுவது சந்தேகம் தான் எனவும் தெரிகிறது.

https://www.instagram.com/p/BvGlnaNBv0K/?utm_source=ig_embed

author avatar
Vignesh

Leave a Comment