தனது படங்களை தானே தயாரிக்க முன்வந்துள்ளாரா சிவகார்த்திகேயன்?!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் தற்போது அவரது பட தயாரிப்பின் மூலம் மூன்றாவது படமாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கும் வாழ் படத்தினை தயாரிக்க உள்ளார்.

இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்த நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்துளாராம்.

அதே போல அருவி இயக்குனர் அருண் பிரபு இயக்கம் வாழ் படமும் 24ஏஎம் நிறுவனம் தான் தயாரிக்க இருந்ததாம். ஆனால் படம் ஆரம்பிக்க லேட் ஆனதால் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க முன்வந்துவிட்டாராம்.

சிவகார்த்திகேயன், ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தை 24ஏஎம் தயாரித்து வருகிறதாம். ஆனால் அத்தனையும் தானே வாங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.