பாலியல் புகாரில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலி சாமியார் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இதுவரை இவர் மீது 18 முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 2 போக்சோவில் பதிவாகியுள்ளது. மேலும், மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…