நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வீட்டில் ஊரடங்கில் அமைத்த மாடித்தோட்டைத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னர் வீடுகளில் தோட்டம் அமைத்து அதை பராமரிப்பார்கள். தற்போது மாடி வீடுகளாகவும், நெருக்கமான கட்டிடங்களாலும் தோட்டம் அமைப்பது கடினமாகிவிட்டதால் பலரும் அவர்களது மொட்டை மாடிகளில் தோட்டத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மாடித்தோட்டம் அமைப்பதில் பல நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குஷ்பூ, மாதவன், சுஹாசினி ஆகிய திரைபிரபலங்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயனும் களத்தில் இறங்கியுள்ளார். அவர் தனது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் புதிய வீட்டு மொட்டைமாடியில் இந்த மாடித்தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார். மேலும், இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், நம்ம வீட்டு தோட்டம். இதை ஊரடங்கிற்கு சில நாட்கள் முன்னால் தான் தொடங்கினேன். தற்போது இதில் விளையும் காய்கறி, கீரைகளை பறித்து சமைக்கிறோம். இதை இன்னும் முழுமையாக தயார் செய்ய நினைக்கிறன். அதற்கு சிறிது காலம் ஆகும். அதன் பின்னரும் உங்களுக்கு தோட்டத்தை காட்டுகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இந்த தோட்டத்தை போன்று நமது வாழ்க்கையும் விரைவில் செழிப்பாகிவிடும் என்று கூறியுள்ளார்.
Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…
Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…
Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில்…
Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக…
Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட…
Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம்…