மாவீரனாக அவதாரம் எடுக்க போகும் சிவகார்த்திகேயன்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்த முடித்த பிறகு 21-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில், நேற்றிலிருந்து, இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதுஎன்னவென்றால் , இந்த படத்திற்கு தலைப்பு மாவீரன் என்று வைக்கப்பட்டுள்ளதாம். இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment