அரசியலில் கால்பதிக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!

ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமாகிய ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி ஷர்மிளா புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதிப்பிற்குரிய முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆகிய ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி தான் ஷர்மிளா. இவரது சகோதரி புதியதாக ஒரு அரசியல் கட்சி துவங்க உள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா தனது தந்தை ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டிகு நெருக்கமானவர்களுடன் ஹைதராபாத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், அவரது சகோதரி கட்சி துவங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் நிலைப்பாடு என்ன என பொறுத்திருந்து பாப்போம்.

author avatar
Rebekal