இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி – சிறிசேனா அறிவிப்பு

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு.

சுதந்திரா கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய முன்னாள் அதிபர் சிறிசேனா, இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில், தான் போட்டியிட போவதாகவும், தமக்கு எதிரான எந்தவொரு சதி திட்டத்துக்கும் அஞ்சப்போவதில்லை எனவும் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் என கூறி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அந்நாட்டின் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருந்த நிலையில், 2024 இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment