வேலூர் மாவட்டம் அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக ஆந்திர மாநிலம் எல்லையில் அமைந்துள்ள அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. மேலும் வீடுகளை இடித்து பொது மக்களைத் துன்புறுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனத்துறையினர் விரட்டினர்.

ஆனால் அந்த யானை நேற்று அதிகாலை 1 மணிக்கு மீண்டும் பைரப்பள்ளி வந்து அங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள வாழைத் தோட்டத்தில் புகுந்து 300 மரங்களை சாய்த்தது. மேலும் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர. மேலும் யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.