ஒரே டோஸில் தடுப்பூசி – ஜான்சன் & ஜான்சன், மத்திய அரசிடம் விண்ணப்பம்!!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டு அங்கீகரிக்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய தடுப்பூசிகளை தயாரித்து வரும் நிறுவனங்கள் அனுமதிகோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்