பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர்.!

பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர்.!

பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாடகர் ஏ. எல். ராகவன் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல் பாடியிருந்தார், மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துஇருக்கிறார், இவர் பிரபல நடிகையை எம்.என்.ராஜமை வை காதல் திருமணம் செய்தார.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வசித்து வந்த பாடகர் ஏ. எல். ராகவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது, இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா
இருப்பது உறுதி செய்யப்பட்டது , மேலும் இதனை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

இதனால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளார்கள், இதனால் சினிமா சேர்ந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்  அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாடகர் ஏ.எல்.ராகவனின் மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிக பெரிய இழப்பாகும் என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube