மே மாதத்திலிருந்து கோவிட் -19 சோதனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வாங்கியவர்களின் மொபைல் பயண பாஸை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும், என்று அதன் விமான சேவை ஒழுங்குமுறை திங்களன்று தெரிவித்துள்ளது.IATAவின் முயற்சியை ஏற்றுக்கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் முதலாவதாகும்.
விமான நிலையங்களில் புறப்படுவதற்கு முன்னர்,பயணிகள் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து, கோவிட் -19 சோதனைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்கள் அடங்கிய பயண பாஸை தங்கள் ஸ்மார்ட்போனில் காண்பிப்பதன் மூலம் சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி பெற முடியும்,என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) தெரிவித்துள்ளது.
IATAவின் பாஸை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து அரேபிய எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட விமான சேவை நிறுவனங்கள் இந்த பாஸை சோதனை செய்கின்றன.
ஆகவே,IATA இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் ஒரு அறிக்கையில்,”எங்கள் IATA-வுடன் சிங்கப்பூர் அரசாங்கம் இணைந்த இத்தகைய கூட்டு முயற்சிகளின் வெற்றியின்மூலம் மற்ற நாடுகளும் அவற்றை பின்பற்றுவதற்கு ஒரு மாதிரியாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டுடன் தற்போதுள்ள சூழலை ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவான கொரோனா வைரஸ் வழக்குகளைக் கொண்ட ஆசிய வணிக மையமாக சிங்கப்பூர் உள்ளது.மேலும் தொற்றுநோய்களின் போது தொழில்நுட்பத்தை வளர்ப்பதிலும், பயன்படுத்துவதிலும் ஒரு தலைமையிடத்தில் சிங்கப்பூர் இருந்து வருகிறது.
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…