Silk Smitha : போதைக்கு அடிமையாகி மருத்துவர் கட்டுப்பாட்டில் இருந்த சில்க் ஸ்மிதா! உண்மையை புட்டு புட்டு வைத்த நடிகர்!

By

Silk Smitha

கவர்ச்சி என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு நடிகை சில்க் ஸ்மிதா தான். இவர் ஆடிய கவர்ச்சி நடனம் யாருக்கும் மறக்கவே மறக்காது என்றே கூறலாம் அப்போதிலிருந்து இப்போது இருக்கும் 2kகிட்ஸ் வரை சில்க் ஸ்மிதாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்றே கூறலாம். முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலியே திடீரென 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இவருடைய மரணத்திற்கு தெளிவான விளக்கம் இதுவரை வெளியாக கூட இல்லை. கவர்ச்சியை தாண்டி நன்றாக நடிக்க தெரிந்த நடிகையை தமிழ் சினிமா இழந்துவிட்டதே என அந்த சமயமும் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வருத்தப்பட்டதும் உண்டு.  இந்நிலையில், சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்தபோது அவர்க்கு மன அழுத்தமும் வேதனையும் அதிகமாக காரணமே அவர் சொந்தமாக படங்களை தயாரித்தது தானம்.

ஏனெனில் அவர் சொந்தமாக தன்னுடைய செலவில் தயாரித்த படங்கள் எதுவும் ஓடவே இல்லை என்ற காரணத்தால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாம். பிறகு இதனால் மனமுடைந்து போன சில்க் ஸ்மிதா பிறகு பாசத்திற்காகவும் எங்கினாராம். பாசத்திற்காக ஏங்கிய அவருக்கு மருத்துவர் ஒருவர் பழக்கமானராம்.

பிறகு சில்க் ஸ்மிதாவுக்கு போதை பழக்கம் வந்ததும் அப்டியே தொடர்ச்சியாக போதை பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டாராம். அந்த மருத்துவர் சில்க் ஸ்மிதாவுக்கு போதை ஊசி போடுவதற்காக தான் வீட்டிற்கு வருவாராம். பிறகு இதனால் மருத்துவருக்கும் சில்க் ஸ்மிதாவுக்கு இடையே முதலில் நட்பு வர அடுத்ததாக அது காதலாகவும் மாறியதாம்.

இருப்பினும் அந்த மருத்துவருக்கு ஒரு மகன் இருந்தாராம். அவருடைய மகனுக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் இருந்த காரணத்தால் சில்க் ஸ்மிதா அவருக்கு சற்று உதவி செய்தாராம். இதனால் அந்த மருத்துவர் சில்க் ஸ்மிதா மீது சந்தேகப்பட்ட காரணத்தால் சில்க் ஸ்மிதா மிகவும் வேதனை அடைந்தாராம். அதன் பிறகு தான் சில்க் ஸ்மிதா மர்மமான முறையில் மரணமடைந்தாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சில்க் ஸ்மிதா இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்களும், பாடல்களும் என்று மறக்காமல் ரசிகர்கள் மனதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.