இருமுகன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிலம்பரசன்..?

நடிகர் சிம்பு இருமுகன் திரைப்படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்.

சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவகவுள்ள படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்த்து அடுத்ததாக இருமுகன் திரைப்படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். ஆம் இயக்குனர் ஆனந்த் சங்கர் நடிகர் சிம்புவை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை சிம்புவிற்கு பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.