சிம்புவின் 50வது படம் பற்றிய மாஸ் அப்டேட்.! இயக்குனர் பெயரை கேட்டல் அசந்துவிடுவீர்கள்.!

சிலம்பரசனின் 50வது திரைப்படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிலம்பரசன் தனது அடுத்த இன்னிங்க்ஸை கோலாகலமாக தொடங்கியுள்ளார். அடுத்தடுத்து அவர் தனது படங்களின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார்.

தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். மாநாடு வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு இன்று மீண்டும் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த படத்தை அடுத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை அடுத்து ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இதனை அடுத்து சிலம்பரசனின் 50வது திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.