அக்டோபர் 2 வரை காத்திருங்கள் ! பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு

பிளாஸ்டிக்கைத் தடை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனால் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.பின் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அதில்,பிளாஸ்டிக் குறித்த யோசனையை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாடு முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கைத் தடை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் சணல் பைகள் மற்றும் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி.