ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சித்தராமையா.!

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சித்தராமையா.!

Siddaramaiah

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் புதிய முதல்வர் சித்தராமையா.

கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி , நேற்று மாநில முதல்வர் யார் என அறிவித்தது.சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவு அறிவிக்கப்பட்டது .

நேற்று காங்கிரஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், சித்தராமையா தான் கர்நாடகாவின் புதிய முதல்வர் என அறிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். டி.கே.சிவகுமார் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து புதிய ஆட்சி அமைப்பதற்கு சித்தராமையா உரிமை கோரினார். நாளை பெங்களூருவில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube