அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் அரைசதம்..!

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசல்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 13 ரன்கள் எடுத்து மயங்க் அகர்வால்  விக்கட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாட மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது 30-வது ஓவரில் ஜேமிசனிடம் போல்டானார்.

அடுத்த சில ஓவரில் புஜாரா 26,  ரஹானே 35 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். தற்போது ஷ்ரேயாஸ் ஐயர்,  ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி 83 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75* , ஜடேஜா 50* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

author avatar
murugan