இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி…! மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக உயர்ந்த சிலிண்டர் விலை…!

மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக  கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.

இன்று மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக கேஸ் சிலிண்டர்கள் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேஸ் சிலிண்டரின் விலை ரூ 50 அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி ரூ.50  உயர்த்தப்பட்டது. பின் டிசம்பர் 16-ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ரூ.50 ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக  கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.