ஒடிசாவில் அதிர்ச்சி.. ஒரே வீட்டில் 6 உயிரிழப்பு.!

ஒடிசாவின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் காவல் நிலையப்பகுதியில் உள்ள சன்ரபாடா கிராமத்தில் உள்ள புலு ஜானி (50), அவரது மனைவி ஜோதி (48) மற்றும் 12 முதல் இரண்டு வயது வரையிலான இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய 6 பேர் இறந்த நிலையில் சடலங்களை போலீசார் அவர்களது வீட்டில் இருந்து மீட்டனர்.

கைப்பற்றிய சடலங்களை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இவர்களின் வீட்டு கதவு  நீண்ட நேரம் பூட்டப்பட்டிருப்பதை உள்ளூர்வாசிகள் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

“இது ஒரு கொலை அல்லது தற்கொலை வழக்காக  என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும்  என்று அவர் கூறினார்.

இந்த தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக கிராமத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் தேன் சேகரித்து விற்பனை செய்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூடுதல் எஸ்.பி. மனோரஞ்சன் பிரதான் தெரிவித்தார்.

 

 

author avatar
murugan