ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக, பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில், இந்த தடுப்பூசிகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ள சந்தையில் விற்பதற்காகவும், இந்த தடுப்பூசிகள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…
MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…