பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் களத்தில் குதித்துள்ள ஷிவானி நாராயணன்!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது மீண்டும் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையின் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சிவானி நாராயணன். 19 வயது மட்டுமே ஆகி இருக்கக் கூடிய நிலையில் இவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ஷிவானி நாராயணன் பகல் நிலவு எனும் தொடரில் நடித்து மிகப் பிரபலமாகிய ,நிலையில் அண்மையில் இரட்டை ரோஜாக்கள் எனும் நாடகத்தில் நடித்து வந்தார். ஆனால் இடையிலேயே அந்த நாடகத்தில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் அதன் பிறகு தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் அட்டகாசமான தனது பல புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வந்த சிவானி குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் எல்லாம் பேச்சுக்கள் எழுந்துகொண்டே இருந்தது.

அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்ற சிவானி தற்பொழுதுதான் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார். வெளியில் வந்து ஒரு வாரங்கள் ஆகி இருந்தாலும் சிவானி பழையபடி புகைப்படங்கள் வெளியிடவில்லை. சாதாரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டும் வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் தனது ஸ்டைலில் அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
Rebekal