9 வகுப்பு படிக்கிற உன் மகள என் மகனுக்கு கொடு…அதலாம் கொடுக்கமுடியாது…அப்ப கடத்துட மவனே.!குடும்பத்தின் உதவியோடு சிறுமியை கடத்திய இளைஞன்.!

9 வகுப்பு படிக்கிற உன் மகள என் மகனுக்கு கொடு…அதலாம் கொடுக்கமுடியாது…அப்ப கடத்துட மவனே.!குடும்பத்தின் உதவியோடு சிறுமியை கடத்திய இளைஞன்.!

சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது பள்ளிமாணவியை குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற இளைஞனை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஓமலூர் அருகே உள்ளது தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சேடப்பட்டி ஊராட்சி இந்த  கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் வயது 40 .அதே பகுதியில் தையல் கடை வைத்து ஜெயகணேஷ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா வயது 36.இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இவருடைய மகள் அக்கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் வயது 24 என்ற இளைஞர் ஜெய்கணேஷின் மகள் பள்ளிக்குச் செல்லும் போது எல்லாம்அவ்வப்போது கேலி கிண்டல் செய்து வந்து உள்ளார்.

சம்பத்தன்று கடந்த 5 ஆம் தேதி அதிகாலை 3 மணி ஜெய்கணேஷின் மகள் வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போது சௌந்தரராஜன், அவரது தந்தை சின்னகண்ணன், தாய் பழனியம்மாள், உறவினர் சித்தன் உட்பட 4 பேரும் மாணவியின் வீட்டுக்கு வந்து சிறுமியை தன் மகனிற்கு திருமணம் செய்துவைக்க வேண்டியதாகவும் மறுத்ததால் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டது தொடர்பாக  மாணவியின் தாய் மேகலா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சௌந்தராஜன் தன்னுடைய 14 வயது மகளை திருமணம் செய்துகொள்ள கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் 4 பேரையும் தேடிவந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜலகண்டாபுரம் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சௌந்தரராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டனர்.

கடத்தப்பட்ட வழக்கில் வாலிபரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு உடந்தையாக  இருந்த அவருடைய தாய்-தந்தை உறவினர்கள்  என 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி பெற்றோர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

author avatar
kavitha
Join our channel google news Youtube