உத்திரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை! இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்திரபிரதேசத்தில் பட்டியலினப்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை உத்திரபிரதேச மாநிலம், பாலராம்பூர் மாவட்டடத்தை சேர்ந்த 22 வயது பட்டியலின பெண் ஒருவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், அடுத்த நாள் இரவு, கையில் குளுக்கோஸ் ஊசியுடன் வீடு திரும்பியுள்ளார்.

அப்பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததையடுத்து, அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில், அவர் இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.