பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.! வைகோ கருத்து.!

பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேராக 650மீ தொலைவில் கடலுக்கு நடுவே ஓர் பேனா சிலை அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கலந்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தால் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. அதிலும் , பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதிலும் ஆதரவு குரலும், எதிர்ப்பு குரலும் எழுந்தன.

இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் வைத்து திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், கலைஞர் கருணாநிதியின் சங்கத்தமிழ் காவியத்தின் அடையாளம் தான் பேனா. என குறிப்பிட்டார்.

மேலும், குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு
தெரிவிக்காதவர்கள் தான் தற்போது பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது. எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment