செஷன்ஸ் கோர்ட் நீதிபதி கோவை சிறையில் ஆய்வு…..!!!

கோவை மத்திய சிறையில், மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஆய்வு செய்துள்ளார்.

மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சக்திவேல் கோவை சிறையில் ஆய்வு நடத்தியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளை சந்தித்து பேசியுள்ளார்.

நீதிபதி சக்திவேல் அவர்களிடம், அடிப்படை வசதிகள் சிறப்பாக வழங்கப்படுகிறதா என்று கேட்டுள்ளார். சிறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் செய்து தருவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறை வளாகத்தை சூரி பார்த்துவிட்டு, சிறை  எஸ்.பி யிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment