அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம்! ஆராய்ச்சியாளர்களின் அதிரடி முடிவு!

அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

இன்று அரிய வகை  பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்து வருகின்றன. இதனை காப்பாதற்காக வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் அழிந்து வரும் பென்குயின்களை காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் பென்குயின்கள் இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரம் பென்குயின்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, கால சூழ்நிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்க சீர்கேடு காரணமாக அழிந்துவரும் பென்குயின் இனத்தை காப்பாற்றுவதற்காக தனி  கூடாரங்கள் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.