“ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகளின் விடுதலை அடங்கியிருப்பது என்பது துயரம் மிகுந்தது” – சீமான்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி 2011- ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28- ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண், செங்கொடி.

இவரின் 9- ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று சென்னையில் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேர் விடுதலைக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கிய செங்கொடியின் நினைவுநாள் இன்று என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஒரு தலைமுறை காலம் கடந்துவிட்ட போதும் அவர்கள் விடுதலை ஆகாததுதான் பெரும்துயர் எனவும், ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகள் விடுதலை அடங்கியிருப்பது என்பது துயரம் மிகுந்தது என தெரிவித்துள்ளார்.