ஆதரவு எம்எல்ஏக்கள் அணிவகுப்பு : சிவசேனா அறிவிப்பு

மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவு எம்எல்ஏக்களின் அணிவகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆனால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.எனவே ஆளுநர் இருவருக்கும்  பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.இதன் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரான  சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 


அவரது பதிவில்,மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவு எம்எல்ஏக்களின் அணிவகுப்பு நடைபெறும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மேலும் ஆளுநரும் அணிவகுப்பை நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.