ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் யார் ..? செல்வராகவன் பதில்..!

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.

இந்த ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பது யார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியதில் ஒருபுறம் ஜிவி பிரகாஷ் என்றும் மற்றோரு பக்கம் யுவன் ஷங்கர் ராஜா என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவா அல்லது ஜிவி பிரகாஷா என்று கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வராகவன் ” இரண்டு பேருமே எனது இரண்டு கண்கள் எனக்கு இருவரும் மிகசிறந்த நண்பர்கள். படத்திற்காக நேரம் ஒதுக்கவேண்டும் மேலும் வரும் நேரம் அதைத்தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.