குதிரையுடன் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட தோனி..!! வைரலாகும் வீடியோ..!!

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு நேரத்தில் குதிரையுடன் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட வீடியோ வெளிவந்து உள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். மேலும் மீதமுள்ள ஐபிஎல் போட்டியை இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும்  என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சி நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் அவர் வளர்க்கும் குதிரையுடன் விளையாடியும் வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

வீடியோவில் குதிரையுடன் தோனி ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார். இந்த வீடியோ காட்சி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.