“ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.. மீண்டும் சந்திப்போம்” – கோலி ட்வீட்!

பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் “விரைவில் அனைவரையும் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாம் பிலே-ஆப்ஸ் சுற்று, நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, நாளை நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அணியில் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், ஏற்று, இறக்கங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளோம். இது ஒரு யூனிட்டாக எங்களுக்கு ஒரு சிறந்த பயணம் என கூறிய அவர், வெற்றி எங்கள் வழியில் செல்லவில்லை என கூறியுள்ளார். விஷயங்கள் தங்களிடம் செல்லவில்லை எனவும், ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு எங்களை பலப்படுத்துகிறது. விரைவில் அனைவரையும் சந்திப்போம் என பதிவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.