மே மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும், தடையை மீறி நடந்த திருமணங்கள் சட்டவிரோதமானது என மத்தியபிரதேசத்தில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தொற்று பரவலின் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால் இந்த மே மாதத்தில் ஊரடங்கு கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் திருமணங்கள் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி மே மாதத்தில் ரகசியமாக சில திருமணங்கள் நடத்தப்பட்டதாகவும், இவ்வாறு நடத்தப்பட்ட திருமணங்கள் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தை சேர்ந்த உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த திருமணங்கள் சட்டவிரோதமானது என அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் மே மாத ஊரடங்கின் போது திருமணம் நடத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில் சிலர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டாலும், பலர் அண்டை மாநிலங்களுக்கு திருமணங்களை மாற்றி வைத்து நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2024 : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த…
Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…
Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…