இரண்டாவது டெஸ்ட்:தடுமாறும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள்…!விக்கெட் இழக்காமல் இருக்கும் ஆஸ்திரேலிய அணி …!

உணவு இடைவேளை வரை  ஆஸ்திரேலிய அணி  66 ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது .
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் அடித்துள்ளது.தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.களத்தில் பிஞ்ச் 28*,ஹாரிஸ் 36* ரன்களுடன் உள்ளனர்.

Leave a Comment